தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,616க்கும், கிராமிற்கு ரூ.30 ஆக உயர்ந்து, ரூ.4,452 க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35616க்கும், கிராமிற்கு ரூ.30ஆக உயர்ந்து, ரூ.4,452 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து ரூ.75.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,300 ஆக உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.