மாத தொடக்கத்தில் அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை.!

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில்.ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தாண்டியதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் மாத தொடக்க நாளான இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (01. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,880க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கும், கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.77,800க்கும் விற்பனையாகிறது.

ஜனாதிபதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

சென்னையில் நேற்றைய தினம் (31. 01. 2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்று ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment