தேவதையென்றோம்..! தெய்வம் என்றோம்..! – கமலஹாசன் ட்வீட்

நாளை நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.