ஞானவாபி மசூதி வழக்கு – இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது வாரணாசி நீதிமன்றம்!

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்.

உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது. கள ஆய்விற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றமே இதுகுறித்து முடிவு செய்ய உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment