முகநூலில் காதலித்து மணந்த கணவர் ஏமாற்ற முயற்சி: பெண் குற்றச்சாட்டு

    

முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், வேறொரு பெண்ணை மணமுடிக்க முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஸ்ரீராமன் ராணுவத்தில் உள்ளார். அகமதாபாத்தில் பணிபுரியும் அவரும், திருவண்ணாமலையை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணும் முகநூல் மூலம் காதலித்து, கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அகமதாபாத்தில் வசித்து வந்த அவர்கள், அண்மையில் சொந்த ஊர் வந்தனர். அப்போது, ஸ்ரீராமனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் முகநூல் மூலம் 5 பெண்களை ஸ்ரீராமன் காதலித்து ஏமாற்றியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment