கொரோனாவை வென்ற செஞ்சி தி.மு.கவின் எம்.எல்.ஏ – சிகிச்சையில் குடும்பத்தினர்!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிலர் உயிரிழந்துமுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ மஸ்தானுக்கு அண்மையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். ஆனால், இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தான் வருகின்றனர்.

author avatar
Rebekal