கொடூரமான கொரோனாவை ஒழிக்க வீட்டிலேயே மாஸ்க் தயாரியுங்கள்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் பெரியவர்கள் என அனைவருமே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்றவரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடிய மிகக்கொடுமையான இந்த கொரோனா வைரஸ் நமக்கும் தொடராமல் இருப்பதற்கு தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.

நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, விளையாடுவது என தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள். மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கலில் கிடைக்கக் கூடிய மாஸ்க்கை வாங்காதீர்கள். அது மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உதவட்டும்.

நாம் நமக்கான மாஸ்க்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். நானே எனது வீட்டில் உள்ளவர்களுக்கு மாஸ் தயாரித்துக் கொடுத்து வருகிறேன். சுத்தமான துணியை மூன்று அடுக்குகளாக வைத்து மாஸ்க்குகளை தயாரிக்க முடியும் என நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை கூறியுள்ளார். இதே ஆலோசனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal