கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. மறுபுறம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன. இதற்கு மத்திய அரசின் நிர்வாகம் சரியில்லை என்று பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். கொரோனா உருமாறி வருவதால் இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருந்தது.
எப்போது உருவாகும் என தெரியாததால் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க தயாராகுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த இப்போதே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, ஜூன் மாத தொடக்கத்திலிருந்து இந்த இரண்டாம் அலையின் வேகம் படிப்படியாகக் குறையும் என்று வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் கூறியுள்ளார். கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் வைரஸ் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நிச்சயம் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…