நினைத்ததை முடித்து காட்டிய கங்குலி .. இது தாதா ஸ்டைல் மச்சி !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.இதற்கிடையில் வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதற்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் கங்குலி இந்திய அணி வங்கதேச அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த முடிவு செய்தார்.ஆனால் இந்த தொடருக்கு முன்னதாக விராட்  கோலியிடம் மற்றும் வங்கதேச அணி நிர்வாகத்திடம் பேசி அனுமதி பெற்றார்.இதனால் தான் நினைத்ததை கங்குலி முடித்து காட்டியுள்ளார்.இதனை தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.