காடுவெட்டி குருவின் மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு.!

குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனால், குருவின் நினைவிடத்திற்கு அவரது மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்றிருந்தனர். இதையடுத்து, ஒரு கும்பல் குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோரிடம்  வழி மறித்து பிரச்சனை செய்ததாகவும், கூறப்படுகிறது.

அப்போது, கனலரசனை அரிவாளால் வெட்ட முயன்றபோது  மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், கனலரசனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

author avatar
Dinasuvadu desk