வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உடலுக்கு இறுதி சடங்கு..!

வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்தின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் பறந்த போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு 

இதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு விமானியும் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் தேனீ மாவட்டம், ஜெயமங்கலத்தை சேர்ந்த விமானி மேஜர் ஜெயந்த் உயிரிழந்துள்ளார். அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

இந்த நிலையில், அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment