இன்று முதல் அனைத்து திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி…!

இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6-ம் தேதி வரை அதாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும், திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan