அரசு பள்ளி மாணவர்களுக்கு பஞ்சாபில் இலவச ஸ்மார்ட் போன்!

பஞ்சாபில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்தார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் தருவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த திட்டத்தை தற்பொழுது 92 கோடி மதிப்பில் பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம் மூலம் தொடக்கி வைத்தார்.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக பயிற்றுவிக்க படுவதால், இந்த ஸ்மார்ட் போன் மிகவும் பயன்படும் என முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

author avatar
Rebekal