அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு விலையில்லா மருத்துவம்… உபி முதல்வர் புதிய அறிவிப்பு.!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்தவ சேவை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு உதவியாக அவர்ளுக்கு இலவச மருத்தவ சேவைகளை வழங்கும் உத்தரவு.

அதாவது, பதவியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும்,

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தகுதியானவர்களை கண்டறிந்து மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment