‘கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்’ – யாருக்கு வழங்கப்படுகிறது தெரியுமா..?

சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில், “கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்” மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சார்ந்த முகமது ரபி என்பவருக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரை சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கம் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இந்த ஆண்டு, “கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்” மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சார்ந்த முகமது ரபி என்பவருக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பதக்கத்தை முகமது ரபி அவர்கள் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்வார்.

இந்த பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். பதக்கத்துடன் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், சான்றிதழும் முதலமைச்சர் அவர்கள் முகமது ரபிக்கு வழங்குவார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.