பஞ்சாப் முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங்கிடம் 5 மணி நேரம் அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங் உறவினர் புபிந்தர் சிங் ஹனியை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்