தொடர் தோல்விக்கு ரோகித் ஷர்மா தான் காரணம் என நினைக்க வேண்டாம் – கிரேம் ஸ்வான்!

தொடர் தோல்விக்கு ரோகித் ஷர்மா தான் காரணம் என நினைக்க வேண்டாம் – கிரேம் ஸ்வான்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 15 வது சீசன் 23 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியாக தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளதற்கு பலரும் ரோகித் சர்மாவை காரணம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் அவர்கள், தொடர் தோல்விக்கு ரோகித் சர்மா தான் காரணம் என யாரும் நினைக்க வேண்டாம். அவரது கேப்டன்சி கேள்விக்குறி ஆக்கப்படுவது எனக்கு துளியும் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube