கிரண்பேடி விஷம் வைத்து கொல்வார்.! தமிழிசை சர்க்கரை கொடுத்து கொல்கிறார்.! நாராயண சாமி விமர்சனம்.!

அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார்.

அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை ரங்கசாமி ரசித்தார். ஆனால், தற்போது அவர் அனுபவித்து வருகிறார். என்று கூறினார்.

மேலும், அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். கிரண்பேடி விஷம் கொடுத்து கொல்வார். தமிழிசை சர்க்கரை கொடுத்து கொள்கிறார். ஆட்சி நடத்தப்பட முடியவில்லை என்றால் முதல்வர்  ரங்கசாமி ராஜினாமா செய்துவிடலாம். எனவும் விமர்சித்து பேசினார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment