காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2009-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு திடீரென பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இவர் சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் .எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘பாஜகவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே வெறுப்பை வளர்ப்பது தான் என்றும், மாக்கள் பணிக்காக காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன். மாவட்டந்தோறும் சென்று மக்களுடன் பேசுவேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.