முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா காலமானார்…!

முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா வயது முதிர்வு காரணமாக காலமானார். 

காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா அவர்கள்,  1991-1996 ஆம் காலகட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், இவருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த ஒரு சலுகையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பூண்டி வாண்டையார், என்றாலே தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் அவருக்கு என்று தனிப் பெரும் செல்வாக்கு உள்ளது. மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து, எளிமையின் உருவாய் திகழ்ந்த இவர், அரசியல், விவசாயம், சமூகப்பணி, இலக்கியம் என பல துறைகளிலும் ஈடுபாடு உள்ளவர்.

இந்நிலையில், 93 வயதான துளசி அய்யா வாண்டையார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.   இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.