#ELECTIONBREAKING : திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்….!

பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாஜக-வில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது இவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதே அக்கட்சியில் இணைந்து, அவரை ஆதரிக்க சரியான தருணம் என்றும், இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே பலவீனமாகிவிட்டதாகவும் கவலை  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் வலிமை, ஜனநாயக அமைப்புகளில் தான் உள்ளது என்றும், நாட்டு முன் எப்போதும் இல்லாத அளவில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பதாகவும், வாஜிபாயின்  ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதா ஒருமித்த கருத்தை நம்பியதாகவும், ஆனால், தற்போதைய பாரதிய ஜனதா அரசு மாற்று கருத்தை  நசுக்குவதையும், வெல்வதையும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.