கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம்
பொதுவாகவே காவல்துறையில் மோப்ப நாய்களை பராமரிக்க ஆண் காவலர்களை தான் நியமிப்பதுண்டு. இந்த நிலையில், முதல்முறையாக தமிழகத்தில் மோப்ப நாய்களை பராமரிக்க 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.