38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

விழுப்புரத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த முதல்வர்..!

செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர்  சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து,  செங்கல்பட்டிலும் கள்ள சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.