இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்சு மோடெஜி  (Toshimitso Motegi) மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு துறை அமைச்சர் தாரோ கோனோ  (Taro Kono) இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்ஸு ஆலோசனைமேற்கொண்டு வருகிறார்.