பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 3 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  இந்த பட்டாசு ஆலையில் பிரான்சி ரக பட்டாசு தயாரித்து கொண்டியிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடி வெடித்து சிதறி கொண்டிருப்பதால், பட்டாசு ஆலை வளாகத்திற்கு செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலைக்கு வெளியில் இருந்தே தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அறை தரைமட்டமாகி உள்ளது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இது 5வது வெடிவிபத்து என்பதாகும். அதேபோல் தொடர் விபத்துகள் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்