பட்டாசு ஆலை வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் – சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி, செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, சிவகாசி களத்தூரில் ஜனவரி 1-ஆம் தேதி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் இறந்த நிலையில், ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்