தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து.! ஒருவர் பலி..!

விருதுநகரில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

விருதுநகரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டிச் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் உள்ளன.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த முருகனின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment