டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து…..நோயாளிகள் வெளியேற்றம் !

பஞ்சாபி பாகில் உள்ள  இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில்  காயம் ஏதும் இல்லாமல் நோயாளிகள் உயிர்தப்பினர்.

டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் அனைவரும் பத்திரமாக  தீயனைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்.

மேலும் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள OT அறையில் இருந்து மதியம் 1.16 மணிக்கு தீயணைக்க அழைப்பு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அழைப்பைத் தொடர்ந்து, தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.