திருட வந்தவனை கொன்று சடலத்தை 15 ஆண்டுகளாக வீட்டில் மறைத்த நபர்..!

ஆஸ்திரேலியாவில் திருட வந்தவனை கொன்று சடலத்தை வீட்டில் 15 ஆண்டுகளாக மறைத்து வைத்த நபர்.

புரூஸ் ராபர்ட் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற இடத்தில் வசித்துவந்தார். இவரது வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஒருவர் திருடுவதற்காக வந்துள்ளார். திருடனை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.

இதனால் வீட்டில் சடலத்தின் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதை மறைக்க 70-க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் பிறகு புரூஸ் ராபர்ட் என்பவருக்கு 2017 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக போன இடத்தில் ஒரு சடலம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும், அங்கு ஏராளமான துப்பாக்கிகளை ராபர்ட் மறைத்து வைத்திருந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.