ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று வாழ்வா? சாவா? போட்டியில் அர்ஜென்டினா-மெக்ஸிகோ போட்டி.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று வாழ்வா? சாவா? போட்டியில் அர்ஜென்டினா, மெக்ஸிகோவை சந்திக்கிறது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-C வில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

மெக்ஸிகோ அணி தனது முதல் போட்டியில் போலந்து அணியை சந்தித்தது. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. குரூப்-C வில் இன்னும் ஒரு புள்ளியும் பெறாமல் அர்ஜென்டினா அணி கடைசி இடத்திலும், ஒரு புள்ளியுடன் மெக்ஸிகோ 3ஆவது இடத்திலும் இருக்கிறது.

இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஆட்டம் நள்ளிரவில் 12.30 மணிக்கு தொடங்குகிறது. அர்ஜென்டினா அணியின் அட்டாக்கர் மார்ட்டினெஸ் கூறும்போது, இன்றைய போட்டி எங்களுக்கு பைனல்ஸ் போன்றது.

மேலும் இந்த உலகக்கோப்பையில் நாங்கள் தொடர்வது இன்றைய போட்டியின் முடிவில் தான் உள்ளது. நாங்கள் நிதானமாக இருக்கவேண்டும் அப்போது தான் மீண்டு வரமுடியும் என்று மார்ட்டினெஸ் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment