தந்தை ,மகன் கொலை வழக்கு -அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.சாத்தான்குளம் காவல்நிலையம்,ஜெயராஜ்  பென்னிக்ஸ் இல்லம் மற்றும் கைது செய்யப்பட்ட போலீசார் என விசாரணையை தீவிரப்படுத்த வருகிறது சிபிஐ.

இந்நிலையில்கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இருவரும் உயிரிழந்த கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வெங்கடேசன், பாலசுப்ரமணியனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.