புல்வாமா தாக்குதல் தொர்பாக தந்தை- மகள் கைது..!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில்  40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில்  புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த  அகமது ஷா(50) அவரது மகள் இன்ஷா(23) ஆகிய  இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் இவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய பின்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை  கைது செய்தனர்.

author avatar
murugan