விவசாயிகள், தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு நூதன முறையில் போராட்டம்.!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழிக்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே வீடு கட்டும் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான இந்த போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்