வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி டில்லி சலோ என்ற அறைகூவல் உடன் விவசாயிகள் போராட்டம் ஒன்றை தொடங்கினார். இந்த போராட்டத்தின் ஆரம்பத்திலேயே மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
அதன் பின் விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் கையிலெடுத்தனர். அவ்வாறு குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட செங்கோட்டை டிராக்டர் பேரணி முற்றுகை வன்முறையில் முடிந்தது. இன்றுடன் இந்த போராட்டம் தொடங்கி ஓராண்டு நினைவு நிறைவு பெறுகிறது.
இதன் காரணமாக டெல்லி எல்லைகளில் கூடியுள்ள ஏராளமான விவசாயிகள் நாடு முழுதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த விவசாயிகளின் போராட்டம் வெற்றியில் தான் முடிந்துள்ளது. அண்மையில் மத்திய அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…