வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதற்கொண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆறு மாதங்களாக நடைபெறக்கூடிய இந்த போராட்டத்தில், அவ்வப்போது வித்தியாசமான போராட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் துவங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுபெறும் நிலையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருக்க கூடிய விவசாயிகள் அனைவரும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கருப்பு கொடியுடன் கருப்பு டர்பன் அணிந்து எல்லைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தை முன்னிட்டு டெல்லி எல்லையான சிங்குவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…