ஃபானி புயல் பாதிப்பு : உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு  உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பூரி பகுதியில் ஃபானி புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு  உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், ஒடிஷா முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment