7 மில்லியன் கொரோனா பற்றிய தவறான பதிவுகளை நீக்கியது பேஸ் புக்!

கொரோனா பற்றிய தவறான 7 மில்லியன் பதிவுகளை தனது பக்கத்தில் இருந்து நீக்கியது பேஸ்புக் நிர்வாகம்.

அண்மை காலங்களாகவே உலக அளவில் அதிகம் பேசப்பட்டு கொண்டிருப்பது கொரானா வைரஸ் தான். உலகம் முழுவதற்கும் ஒரே நோய். இந்த கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த சில வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

அதிலும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படக் கூடிய சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பல தவறான கருத்துக்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி அதன்பின் போடப்பட்டுள்ள தவறான கொரானா வைரஸ் பற்றிய தகவல்கள் 7 மில்லியன் பதிவுகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal