மது பாட்டிலுக்கு கூடுதல் பணம்.. நிரூபிக்க தயார் – அண்ணாமலை பேட்டி

மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து 2000 நோட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை , என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. பெரும்பாலான மக்களிடமும் தற்போது ரூ.2000 நோட்டுகள் இல்லை. நானும் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என்றார்.

மேலும், இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல மமுடிவாகத்தான் இது பார்க்கப்படுகிறது. கடந்த மூன்றரை வருடங்களாக 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்