அரசு மருத்துவமனையில் தீ விபத்து.! அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்.!

தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர்.

 மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து, மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment