குடும்ப தகராறு காரணமாக 8 மாத கைக்குழந்தை உட்பட 4 பேர் தீவைத்து எரித்து கொலை
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 8 மாத கைக்குழந்தை உட்பட 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழரசி அவரது குழந்தைகள் ஹாசினி (1), 8 மாத கை குழந்தையை சத்குரு என்பவர் எரித்து கொலை செய்துள்ளார். மூன்று பேரை பெட்ரோல் ஊற்றி எரித்த போது சத்குரு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் தீக்காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.