தபால் வாக்குகளில் 250 வாக்குகளை பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளை பெற்றுள்ளார்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

6 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 46 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக -104, நாம் தமிழர் – 10, தேமுதிக – 1, சமாஜ்வாதி- 2, சுயேச்சை- 5, நோட்டோ- 1,
செல்லாதவை – 25வாக்குகள் கிடைத்துள்ளன. .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment