தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளை பெற்றுள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 46 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக -104, நாம் தமிழர் – 10, தேமுதிக – 1, சமாஜ்வாதி- 2, சுயேச்சை- 5, நோட்டோ- 1,
செல்லாதவை – 25வாக்குகள் கிடைத்துள்ளன. .