பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் எல்லாம் அப்படி தான் சொல்றாங்க.! – சுதா கொங்கரா.!!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது.

இதில் முதல் வரும் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து சமீபத்தில் பேசிய மணிரத்தினத்தின் உதவி இயக்குனரும் இறுதி சுற்று சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் கூறியது “பொன்னியின் செல்வன் படம் பார்த்தவர்கள் பலர் என்னிடம் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என சொல்கிறார்கள்.  நான் இன்னும் படம் பார்க்கவில்லை விரைவில் படத்தை பார்ப்பேன்” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.