ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது  அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜனவரி 31-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

நேற்று வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் 13 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment