#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தேதி அறிவிப்பு..!

பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் ஜனவரி 31-ஆம் தேதி முதல் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மனுத்தாக்கல் செய்ய பிப்.7-ஆம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 8-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்  2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment