வலுவான ஆளுமைக்கு சான்றாக இபிஎஸ் உள்ளார். ஆனால்..?! திருமாவளவனின் ‘சூசக’ வாழ்த்து.!

இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றத்தால்  உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக அமைந்து உள்ளது. – டிவிட்டரில் திருமாவளவன் வாழ்த்து. 

இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கொண்டாட்டமான நாள் என்றே கூற வேண்டும். அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது.

இபிஎஸ்-க்கு வாழ்த்து : இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றத்தால்  உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக அமைந்து உள்ளது. என்றும்,

தீர்ப்பு வீண் : மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எமது வாழ்த்துகள். என்றும் இந்த வாய்ப்பை வைத்து மீண்டும் பாஜகவை சுமப்பதற்கு அதிமுக பயன்படுத்தப்பட்டால் இந்த தீர்ப்பு அனைத்தும் வீணாகிவிடும். என்று திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment