#Breaking:”இனி காசோலைகளில் இவரே கையெழுத்து போடுவார்” – வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்ற நிலையில்,கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்தார்.

இந்நிலையில்,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment