இன்று முதல் ஆரம்பமானது என்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்புகள்.! ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள்…

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு இன்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் 58,307 இடங்கள் நிரப்பட்ட நிலையில், பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளது.

வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று முதல் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியுள்ளது. வகுப்புகள் தொடங்கியதால் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர். வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை கடந்த 14ம் தேதியே நடத்த உத்தரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment