இன்று பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தப்பட்டது.இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களின்  அசல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இந்நிலையில் பங்கேற்ற 1 லட்சத்து  4 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 20 தேதி வெளியிடப்பட்ட நிலையில்  சென்னை இன்று தரமணியில் அமைந்துள்ள உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடிக்கலந்தாய்வு நடைபெறுகிறது
இதில் தரவரிசையில் முதலில் உள்ள 80 பேருக்கு காலையில் நடைபெறும் என்றும்  மீதம் உள்ள 58 பேருக்கு மாலையில்  நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டது.
அதே போல் நாளை 7 பிரிவுகளாக முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.இந்நிலையில்  ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பொதுப்பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு  நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha