பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உல் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். மேலும், 3 கட்டங்களாக நடக்க உள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1,78,959 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.