தனது ஒரு வயது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் யானை!

தனது ஒரு வயது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் யானை.

நம்மில் பலரும் நமது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதுண்டு. ஆனால், இங்கு ஒரு யானை தனது 1 வயது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், ஸ்ரீகுட்டி என்ற யானை, அங்குள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த யானை பிறந்து ஒரு மாதத்தில் தனது தாயை விட்டு பிரிந்தது. தனது கூட்டத்துடன் சேர முடியாமல் பலத்த காயத்திற்கு ஆளான, இந்த யானையை வனத்துறை அதிகாரிகள் மீட்டு பேணி காத்து வருகின்றனர். தற்போது இது நலமாக உள்ளது.

இந்நிலையில் , இந்த மையத்திற்கு வந்து ஒரு ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இந்த ஸ்ரீகுட்டிக்கு வனத்துறை ஊழியர்கள் ஒரு வயது பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கரும்பு, வெல்லம் மற்றும் அன்னாசி பழங்களை கொண்டு கேக் தயாரித்து, அதனை ஸ்ரீகுட்டியின் தும்பிக்கையால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் ஸ்ரீகுட்டியுடன் இணைந்து பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.